திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கடந்த 15 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவோடு பணியாற்றி வருவதாகவும், தொகுதியை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல இரட்டை இலை சினத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.
















