கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை என, முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது, அதிமுக தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டினார். மேலும் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
















