சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம், மறவபட்டி, வில்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் மற்றும் முதியவர்களின் கால்களின் விழுந்து அவர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் பேசிய ஆர்.பி.உதயகுமார் , அதிமுக வெற்றிப்பெற்ற பின்னர், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார்.
















