மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 – 26 நிதியாண்டில் வசூல் ஆன அதிகபட்ச 3வது ஜிஎஸ்டி வருமானம் இது என்றும், ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடியும், மே மாதம் 2 லட்சத்து ஆயிரம் கோடியும் வசூல் ஆகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி வசூல் ஆகி இருந்ததாகவும், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முழுவதும் மொத்தம் 22 லட்சத்து 27 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாகவும், உள்நாட்டு மொத்த வருமானம் 5 புள்ளி 9 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 17 புள்ளி 8 சதவீதம் அதிகரித்து 53 ஆயிரத்து 861 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















