மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, மந்தை அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி மற்றும் கரகம் ஏந்தி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் போது, பக்திப் பெருக்குடன் வந்த பெண்கள் அம்மன் அருள் வந்து சாமியாடினர்.
















