விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காட்டுத்தீ பரவியதில், 40 ஆடுகள் தீயில் கருகி இறந்தன.
சிப்பிப்பாறையைச் சேர்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை ஆகியோர், காட்டுப்பகுதியில் ஆடுகளை கிடாய் அமைத்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் தீ பரவியதில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆடுகள் தீயில் சிக்கி இறந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















