புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள நான்கு இடங்களில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது
புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வரும் 4ம் தேதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தவெக கூட்டம் நடத்த தட்டாஞ்சாவடி , சுப்பையா சிலை, தவளகுப்பம் சந்திப்பு, வில்லியனூர் உள்ளிட்ட 4 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி காலை 9.30 மணி முதல் பகல் 1 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
















