திருச்சியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி கால் முறிவு ஏற்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது தவெக நிர்வாகி ஆதவ் ஆர்ஜுனாவின் கார் மோதியது.
இதில் கால் முறிவு ஏற்பட்ட காவலர் சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
















