மக்கள் பிரச்னைகளை பேசாமலும், போராட்ட குணமின்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மழுங்கிபோய் வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் திருமண் மண்டபத்தில் அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருவதாக விமர்சித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதாகவும் கூறினார்.
















