தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர், தமிழகத்தில் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம் என்று கூறிய இபிஎஸ், கிட்னி திருட்டு, உறுப்பு திருட்டு என திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறிய இபிஎஸ், முன்னாள் முதலமைச்சர் என்றபோதும் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி வழங்கியதாக குறிப்பிட்டார். அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக திமுக மகளிர் உரிமைத்தொகை கொடுத்ததாகவும், அதனை கொடுக்க வைத்தது அதிமுக என்றும் கூறினார்.
==
















