தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட மொத்தம் ஏழாயிரத்து 600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற வரும் வியாழக்கிழமை கடைசி நாளாகும். இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவும் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவிநாசி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
















