என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாக கேரளம் மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தங்கள் வாக்கை ஒரு மாற்றத்திற்கான வாக்காக மாற்ற வேண்டும் என்றும், தான் வாக்காளராகவும், வேட்பாளராகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் வளர்ச்சியை பற்றி பேசுவதற்கு பாஜகவே காரணம் என்றும், என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















