கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 77 புள்ளி ஐந்து பூஜ்யம் சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த சட்டசபை தேர்தலில் பதிவானதை விட அதிகம் என கூறப்படுகிறது.
















