சொந்த கட்சி வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது கருணாநிதி மறைந்தபோது கிண்டியில் ₹200 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் தர முன்வந்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைப்பதில்லை என்றும், கனிமொழி குறித்து தாம் எழுப்பிய கேள்வி யதார்த்தமானது என்றும் அவர் கூறினார்.
மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என்றும், மக்கள் மத்தியில் அதிமுக கூட்டணிக்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.
















