டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
டெல்லி பந்து வீச்சாளர்களை மிரள வைத்த சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 56 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவும் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
















