தமிழக மக்கள் உதயநிதியை முதல்வராக ஏற்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களையும் மதிக்காத ஒருவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சி அகலும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது.தெரிவித்த அவர், என்டிஏ ஆட்சி அமைந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம் என்றும் கூறினார்.
















