சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரை விசு கனி சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் – பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், விசு கனி தரிசனம் மற்றும் மகா தீபாரதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வகையான பிரசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சித்திரை தமிழ் புத்தாண்டான இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரிடமும், தங்கப் பாவாடை அணிவித்து கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
















