காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் நித்யா சுகுமார் போட்டியிடுகிறார். அவர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி திமுக வேட்பாளரின் கணவரின் நண்பரான ராஜ்குமார் இல்லத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
இதேபோன்று தொழிலதிபர் ஸ்ரீதர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனின் நேர்முக உதவியாளர் எழில்குமார் வீட்டிலும் நேற்று மாலை சோதனை நடைபெற்றது.
















