திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் தமிழரசி ஆதிமூலத்தை ஆதரித்து விருத்தாசலம் பாளக்கரை ரவுண்டானாவில் அன்புமணி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் என்றும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்த வேண்டும் எனவும் கூறினார். நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறிய அவர், போதைப்பொருட்களால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும், அரசு நிலங்களை 99 வருட குத்தகைக்கு விட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த அமைச்சர் விரைவில் சிறைக்கு செல்வார் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
















