இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நமோ செயலி வழியாக மாநில பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் பாதையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைபோடுகிறது எனவும் இரட்டைக் குழல் துப்பாக்கியை போல் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் தெரிவித்தார்.
பாஜக தொண்டர்கள் முதல்முறை வாக்காளர்களை நேரடியாக சந்தித்து இரட்டை இன்ஜின் அரசின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
















