மொழி தெரியாததால் துயரம் : கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு!
Jun 23, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மொழி தெரியாததால் துயரம் : கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு!

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக்   கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர்  20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைத்த தொழிலாளர் நலத்துறையின் நடவடிக்கையையும், அதற்குத் தீவிர முயற்சி எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் கொத்தடிமைகள் மீட்புக்  குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கடம்பங்குளம் எனும் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மேய்க்கும் நபர் ஒருவர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

நேரடியாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திற்கு வேலை தேடி  வந்த நிலையில் மொழி தெரியாத ஒரே காரணத்தினால் தற்போது வரை கொத்தடிமையாக ஆடு மேய்த்து வருவதும் உறுதியாகினது.

20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பாராவை ஆடுமேய்க்கும் கொத்தடிமையாகப் பயன்படுத்திய நபர்கள் அவருக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அப்பாராவை மீட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் அப்பாராவின் உறவினர்களை கண்டறிந்து அவர்களைச் சிவகங்கைக்கு அழைத்துவர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது. அப்பாராவின் மனைவி சீதாம்மாள் இறந்துவிட்ட நிலையில், அவரின் மகள் தும்புதோரா சாயம்மாளை சந்தித்த அப்பாராவ் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்.

இனிமேல் தன் தந்தையைப் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த தும்புதோராவும், தன் குடும்பத்தைக் காண முடியாமல் தவித்து வந்த அப்பாராவும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை மீட்புத் தொகையான 30 ஆயிரம் ரூபாய், ஆட்சியரின் சொந்த நிதி ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னார்வலர்கள் அளித்த நிதி 2 லட்சம் ரூபாயையும் அப்பாராவின் வங்கிக் கணக்கில் செலுத்திய அதிகாரிகள் அவரை குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: ஆந்திராTragedy due to not knowing the language: Man who was a slave rescued after 20 years!கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு
ShareTweetSendShare
Previous Post

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

Next Post

தெய்வீக ஆற்றல் தவழும் மகா விஷ்ணுவின் மகோன்னத ஆலயங்கள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies