10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எத்தியோப்பியால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சலனமும் இன்றி இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து சிதறி ஆசிய நாடுகள்வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, எந்த முன் அறிகுறியும் இன்றி வெடித்து சிதறியது ஏன் ? அதற்காக விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. இது சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறியதால், வானில் 14 கி.மீ உயரத்திற்கு சாம்பலும் புகையும் மேகங்களுடன் கலந்துள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சாம்பல் சூழ்ந்த மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தானை பாதிக்கும் அளவுக்கு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இத்தோடு நின்றுவிடாமல் சீன வானிலையையும் மாசுப்படுத்தும் அளவுக்குச் சாம்பலை கக்கியிருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. சுமார் 10,000 ஆண்டுகளாகச் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, திடீரென வெடித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக அமைதியாக இருந்த எரிமலைகள் பெரும்பாலும் அணைந்துவிட்டதாகக் கருதப்படும் சூழலில் இந்த எரிமலை வெடிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெய்லி குப்பி எரிமலையின் மறு செயல்பாட்டிற்கு அதன் மேக்மா பகுதியில் ஏற்பட்ட ஒரு மாற்றம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் படிகங்கள் குவியும் நிலத்தடி நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தையே விஞ்ஞானிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

பூமியின் ஆழத்திலிருந்து புதிய, வெப்பமான மேக்மா உள்ளே நுழையும்போது, அது எரிமலை அமைப்பை மாற்றுகிறது. இந்த மறுஊட்டம் பழைய மேக்மாவை மீண்டும் சூடாக்கி, உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தச் செயல்முறை திடீரென நடந்தால், அது தீவிரமான உட்புற அழுத்தத்தை உருவாக்கி, சுற்றியுள்ள பாறைகளை உடைத்து, எரிமலை வெடிப்பைத் தூண்டுவதாக விளக்குகின்றனர் விஞ்ஞானிகள். இது மட்டுமின்றி ஹெய்லி குப்பியின் திடீர் வெடிப்பிற்கு பல கூடுதல் காரணிகளும் பங்களித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

செயலற்ற தன்மைக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றும் எரிமலைகள் கூட, புவியியல் தூண்டுதல்களின் சரியான கலவைக்காகக் காத்திருந்து, மீண்டும் செயல்படலாம் என்பதை இந்த எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: விஞ்ஞானிகள்எத்தியோப்பியாVolcano spews ash after 10000 years: Hayley Kubley wakes up from her slumber!சாம்பலை கக்கும் எரிமலைஹெய்லி குப்லி
ShareTweetSendShare
Previous Post

100 கோடி கிளப்பில் இணையும் குஜராத்தி திரைப்படம் : 14,000 % லாபம் பார்த்த படக்குழு!

Next Post

டெல்லி வரை பரவிய எரிமலை சாம்பல் : அடுத்து என்ன நடக்கும்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies