டெல்லி வரை பரவிய எரிமலை சாம்பல் : அடுத்து என்ன நடக்கும்?
Jul 29, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி வரை பரவிய எரிமலை சாம்பல் : அடுத்து என்ன நடக்கும்?

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எத்தியோப்பியாவின் Hayli Gubbi ஹேலி குப்பி எரிமலை வெடித்ததில் எழுந்த சாம்பல் புகை, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது. ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு இந்தியாவில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்தது. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குப் பின் கடந்த நவம்பர் 23ம் தேதி எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. சுமார் 14 கிலோமீட்டர் உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்தும் பார்க்க முடிந்தது.

இந்த எரிமலை வெடிப்பால் 6000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஹவாயின் மௌனா லோவாவைப் போல ஒரு கேடய எரிமலையான ஹெய்லி குப்பி எரிமலையின் உச்சியிலிருந்து சாம்பல் புகைகள் பொங்கியெழுந்து பரவும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதிர்ஷ்டவசமாக, இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் இல்லையென்றாலும் காற்றெங்கும் அடர்த்தியான சாம்பல் புகை பரவி வானமே இருண்டு போனது. இந்த எரிமலை வெடிப்பில், இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி வடக்கு அரேபிய கடல் பகுதி வழியாக இந்தியாவை வந்தடைந்துள்ளது.

மேற்கு ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த சாம்பல் புகை, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கே நகர்கிறது என்று IndiaMetSky Weather தெரிவித்துள்ளது. சிறிது நேரம் வானம் விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் தோன்றலாம் என்றும், சுமார் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் சாம்பல் பரவுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியின் சில பகுதிகளில் பரவிய எரிமலை சாம்பல், குஜராத் வழியாக மகாராஷ்டிரா,டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு நகரும் என்றும், பிறகு இமயமலை சாரலில் உள்ள பகுதிகளுக்குப் பரவும் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை சாம்பலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சல்பர் டை ஆக்சைடு போன்றவை விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், கிழக்கு ஆப்பிரிக்கா, செங்கடல், வளைகுடா நாடுகளின் விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் துலூஸில் உள்ள எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் அடுத்தடுத்த ஆபத்தான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

எரிமலை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் கேபினுள் புகை ஏற்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எரிமலை சாம்பல் தொடர்பான நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதை உறுதிசெய்யவும், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை தரவுகள் பற்றித் தெரிந்து கொள்ள DGCA ஆபரேட்டர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் காற்று மாசினால் மோசமாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த எரிமலை சாம்பல் மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tags: ஹேலி குப்பி எரிமலைHayli Gubbiஎத்தியோப்பியாVolcanic ash spreads to Delhi: What will happen next?
ShareTweetSendShare
Previous Post

10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!

Next Post

பிரிட்டனுக்கு GOODBYE : அதிக வரி விதிப்பால் வெளியேறும் கோடீஸ்வரர்கள்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies