10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!
Sep 17, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

10,000 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பலை கக்கும் எரிமலை : தூக்கத்தில் இருந்து முழித்த ஹெய்லி குப்லி!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 08:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எத்தியோப்பியால் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சலனமும் இன்றி இருந்த ஹெய்லி குப்லி எரிமலை திடீரென வெடித்து சிதறி ஆசிய நாடுகள்வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, எந்த முன் அறிகுறியும் இன்றி வெடித்து சிதறியது ஏன் ? அதற்காக விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. இது சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறியதால், வானில் 14 கி.மீ உயரத்திற்கு சாம்பலும் புகையும் மேகங்களுடன் கலந்துள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சாம்பல் சூழ்ந்த மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தானை பாதிக்கும் அளவுக்கு அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இத்தோடு நின்றுவிடாமல் சீன வானிலையையும் மாசுப்படுத்தும் அளவுக்குச் சாம்பலை கக்கியிருக்கிறது ஹெய்லி குப்பி எரிமலை. சுமார் 10,000 ஆண்டுகளாகச் செயலற்ற நிலையில் இருந்த இந்த எரிமலை, திடீரென வெடித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக அமைதியாக இருந்த எரிமலைகள் பெரும்பாலும் அணைந்துவிட்டதாகக் கருதப்படும் சூழலில் இந்த எரிமலை வெடிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெய்லி குப்பி எரிமலையின் மறு செயல்பாட்டிற்கு அதன் மேக்மா பகுதியில் ஏற்பட்ட ஒரு மாற்றம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது உருகிய பாறைகள், வாயுக்கள் மற்றும் படிகங்கள் குவியும் நிலத்தடி நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தையே விஞ்ஞானிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

பூமியின் ஆழத்திலிருந்து புதிய, வெப்பமான மேக்மா உள்ளே நுழையும்போது, அது எரிமலை அமைப்பை மாற்றுகிறது. இந்த மறுஊட்டம் பழைய மேக்மாவை மீண்டும் சூடாக்கி, உட்புற அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தச் செயல்முறை திடீரென நடந்தால், அது தீவிரமான உட்புற அழுத்தத்தை உருவாக்கி, சுற்றியுள்ள பாறைகளை உடைத்து, எரிமலை வெடிப்பைத் தூண்டுவதாக விளக்குகின்றனர் விஞ்ஞானிகள். இது மட்டுமின்றி ஹெய்லி குப்பியின் திடீர் வெடிப்பிற்கு பல கூடுதல் காரணிகளும் பங்களித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

செயலற்ற தன்மைக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றும் எரிமலைகள் கூட, புவியியல் தூண்டுதல்களின் சரியான கலவைக்காகக் காத்திருந்து, மீண்டும் செயல்படலாம் என்பதை இந்த எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: ஹெய்லி குப்லிவிஞ்ஞானிகள்எத்தியோப்பியாVolcano spews ash after 10000 years: Hayley Kubley wakes up from her slumber!சாம்பலை கக்கும் எரிமலை
Share
Tweet
SendShare
Previous Post

100 கோடி கிளப்பில் இணையும் குஜராத்தி திரைப்படம் : 14,000 % லாபம் பார்த்த படக்குழு!

Next Post

டெல்லி வரை பரவிய எரிமலை சாம்பல் : அடுத்து என்ன நடக்கும்?

Related News

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies