விளம்பரம் ஜோர்... முதலீடு ஜீரோ... : முதலீடுகளை கோட்டை விடும் தமிழக அரசு - அள்ளும் அண்டை மாநிலங்கள்!
Sep 13, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

விளம்பரம் ஜோர்… முதலீடு ஜீரோ… : முதலீடுகளை கோட்டை விடும் தமிழக அரசு – அள்ளும் அண்டை மாநிலங்கள்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 09:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும்பாலான முதலீடுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவை நோக்கி செல்வதாக புகார் எழுந்துள்ளது. விளம்பரத்திற்கு காட்டும் ஆர்வத்தை முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் செலுத்த வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டுப்பயணம் என பல்வேறு கால கட்டங்களில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தெரிவித்திருக்கும் புள்ளிவிவரங்களும், நடைமுறைக்கு வந்த முதலீடுகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு வரவேண்டிய வெளிநாட்டு முதலீடுகளும் அண்டை மாநிலங்களை நோக்கி படையெடுப்பதாகவும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

அதிலும் 2021ம் ஆண்டு முதல் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 23 சதவிகிதமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 16 சதவிகிதம் மட்டுமே செயல்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில் சுமார் 80 சதவிகிதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் மாநாட்டில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் ஹுவாசிங் காலணி நிறுவனத்துடன் தமிழகத்தில் ஆயிரத்து 720 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தென்கொரிய நிறுவனம் தனது நிறுவனத்தை ஆந்திர மாநிலத்தில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

அதோடு உலகின் மிகப்பெரிய ஏசி தயாரிப்பு நிறுவனமான ஜப்பானின் டைகின் நிறுவனமும் ஆந்திராவின் ஸ்ரீநகரில் அதன் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், அவருக்கு உரிய அழுத்தம் கொடுக்கத் தவறியதால் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தரவு மையமும் ஆந்திராவை நோக்கிச் சென்றிருக்கிறது.

ஆந்திராவில் நான்காவது முறையாக ஆட்சியமைத்த சந்திரபாபு நாயுடு தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அண்டை மாநில முதலீடுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றை 99 ரூபாய்க்கு குத்தகை, மின்சார கட்டணத்தில் சலுகை என ஆந்திர அரசு கொடுக்கும் கொடுக்கும் சலுகைகளின் அடிப்படையில் இந்தியாவில் தொழில்தொடங்க விரும்பும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களும் ஆந்திராவையே முதன்மை மாநிலமாக தேர்வு செய்கின்றன. ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் அனைத்தும் வெளிமாநில முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளங்கள் விரித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தமிழக அரசோ வெற்று விளம்பரங்களை வெளியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியின் ஒட்டுமொத்த நிதிநிலையையும் அலசி ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட திமுக அரசு, தற்போது தான் ஈர்த்திருக்கும் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமலும், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த முடியாமலும் திணறி வரும் தொழில்துறையால் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்பும் பறிபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விளம்பரம் எனும் பெயரில் மக்கள் பணத்தை வீணடிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Tags: Advertising is booming... Investment is zero...: Tamil Nadu government is blocking investments - neighboring states are taking advantageMK Stalintn govtAarti files petition seeking Rs. 40 lakh monthly maintenance
Share
Tweet
SendShare
Previous Post

ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளும் சீனா : சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி ஆதாயமா? ஆபத்தா?

Next Post

கோர தாண்டவமாடிய ‘டிட்வா’ புயல் : நிலைகுலைந்த இலங்கை – இந்தியா உதவிக்கரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies