ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளும் சீனா : சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி ஆதாயமா? ஆபத்தா?
Sep 13, 2026, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளும் சீனா : சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி ஆதாயமா? ஆபத்தா?

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் சிறந்த ரோபோக்களை உருவாக்க சீனாவும்அமெரிக்காவும் ஒரு ரோபோ உற்பத்தி போரைத் தொடங்கியுள்ளன. நுகர்வோருக்கான வெகுஜன மற்றும் மலிவு விலை ரோபோக்களின் அளவில் சீனா முன்னணியில் உள்ளது. ஆனால் அதுவே அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றிய ஒருசெய்தி தொகுப்பு.

2013ம் ஆண்டில் இருந்தே தொழில்துறை ரோபோக்களுக்கான சந்தையாகச் சீனா இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, சீன சமூக அறிவியல் அகாடமியில் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின் பிங்க், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க ரோபோ புரட்சியை வலியுறுத்தினார்.

2014ம் ஆண்டு முதல் 4653 மனிதனுக்கான இயந்திரம் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளில் மனிதர்களை ரோபாக்களால் மாற்றும் திட்டத்தையும் சீன அரசு அறிவித்தது. அரசின் கொள்கையை ஒப்புக்கொண்டு சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழில்துறை உற்பத்தியாளர்கள் கையெழுத்திட்டனர்.

2016 ஆம் ஆண்டு 60,000க்கும் மேற்பட்ட தொழில்முறை ரோபாக்கள் இருந்தன. 2017-ல் 10000 தொழிலாளர்களுக்கு 97 ரோபோக்கள் என்பதில் இருந்து 2023 ல் 392 ரோபோக்கள் பிறகு 2024 ல் 470 ரோபோக்கள் என உயர்ந்துள்ளது. ஏற்கெனவே ஒரு மேம்பட்ட உயர் தொழில்துறை நாடாகும் நோக்கத்தில் 2030ம் ஆண்டு வரை சீனாவின் வளர்ச்சித் திட்டத்துக்கான ஆறு முக்கியமான புதிய பொருளாதார வளர்ச்சி துறைகளில் மனித ரோபாட்டிக்ஸ் துறையையும் சீனா தனது மேட் இன் சீனா 2025 கொள்கைத் திட்டத்தில் சேர்த்தது. சீனாவில் வேறு எந்த உற்பத்தித் தொழில்நுட்பத்தையும் விடத் தொழில் துறை ரோபோடிக்ஸ் அதிக முன்னுரிமையும் அதிக கவனமும் பெற்றுள்ளது.

இதற்காக ஆட்டோமொபைல்ஸ் மின்னணுவியல் மற்றும் மருத்துவத் துறையில் தொழில்துறை ரோபோக்களை ஏற்றுக் கொள்வதற்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்து அமெரிக்க ரோபோ நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன. கடந்த ஆண்டு உலகில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்றில் பங்கு சீனாவினுடையதாகும்.

கடந்த ஆண்டு சீனத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 3,00,000 புதிய ரோபோக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, அமெரிக்கா வெறும் 34,000 ரோபோக்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதன் மூலம், ரோபோ உற்பத்தி சந்தையில் சீனா, ஜப்பானை விஞ்சி, உலகப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை எட்டியுள்ளது. சீனாவின் ரோபோ உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

முன்னணி ரோபோ நிறுவனமான UBTech Robotics பங்கின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், சமையல் முதல் சாகசம் வரை என, உலகிலேயே மிகக் குறைந்தவிலையில் R1 என்ற மனித உருவ ரோபோவை சந்தைப் படுத்தியுள்ளது. சுமார் 25 கிலோ எடையும், 4 அடி உயரமும் கொண்ட இந்த R1 ரோபோ, சிக்கலான பணிகளையும் கையாளும் மல்டிமோடல் மாடல் (Large Multimodal Model) வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 5,900 டாலராகும். அதாவது இந்தியாவின் MG Comet EV காரை விடவும் குறைவான விலையாகும். சீனாவின் ரோபோக்கள், கார் பாகங்களை பற்றவைப்பது முதல் இராணுவத் தளவாடங்களை நிர்வகிப்பது வரை பல்வேறு பணிகளைச் செய்கின்றன. மேலும், AI உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ரோபோக்கள் செயல்திறனை மேம்படுத்துகின்றன. சீன ராணுவத்​தில் ஏற்​கெனவே ரோபோ நாய்​கள் சேர்க்​கப்​பட்டு உள்ள நிலையில் ரோபோ வீரர்​கள் சேர்க்​கப்பட உள்ளனர்.

இது தொடர்பாகச் சீனாவின் யுபி டெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்துக்கும் சீன ராணுவத்​துக்​கும் இடையே 330 கோடி ரூபாய் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகியுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்​குள் மனித வடிவிலான 500 ரோபோக்கள் சீன ராணுவத்​தில் ஒப்​படைக்​கப்பட உள்​ளன. இந்த ரோபோ வீரர்களை வியட்​நாம் எல்​லைப் பகு​தி​யில் ரோந்து பணியில் ஈடு​படுத்த சீனா திட்​ட​மிட்டுள்ளது. படிப்படியாக எல்​லைப் பகு​தி​கள் முழு​வதும் ரோபோ வீரர்களை நிறுத்தவும் முடிவு செய்​யப்​பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நாட்டின் மனித ரோபாட்டிக்ஸ் துறையில் ஒரு குமிழி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும் அதிகமான அளவில் மனித ரோபோக்களின் வளர்ச்சி, சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளைத் தடுப்பதால் அவற்றைக் கட்டுப் படுத்துவது முக்கியம் என்று சீன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: chinaரோபோChina is pushing robots: Is China's robotics revolution a benefit or a danger?சீனாவின் ரோபோட்டிக்ஸ்
Share
Tweet
SendShare
Previous Post

எல்லா போக்குவரத்தும் ஒரே இடத்தில் : அசர வைக்கும் அகமதாபாத் ரயில் நிலையம்!

Next Post

விளம்பரம் ஜோர்… முதலீடு ஜீரோ… : முதலீடுகளை கோட்டை விடும் தமிழக அரசு – அள்ளும் அண்டை மாநிலங்கள்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies