ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!
Jan 14, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் பாகிஸ்தான் பலத்த சேதங்களை சந்தித்தது உறுதியாகியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவின் அதிரடி தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் போரை நிறுத்துமாறு கெஞ்சியது. இதனைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரில் F -16 போர் விமானங்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் ரேடார் மையங்கள், தகவல் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையங்கள்,ஓடு தளங்கள் மற்றும் விமான ஹேங்கர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன.

ஆப்ரேஷன் சிந்தூரில் அமெரிக்காவின் F -16 மற்றும் சி-130 விமானத்துடன் சீனாவில் தயாரிக்கப்பட்ட JF 17 ரக போர் விமானம், Airborne Early Warning and Control போர் விமானம் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல போர் விமானங்கள் மற்றும் விமானப்படை தளங்களும் இந்தியாவால் தாக்கி அழிக்கப் பட்டது. பாகிஸ்தானின் F -16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் AP சிங் உறுதி படுத்திய நிலையிலும், பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. மாறாக ஆறு இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் இராணுவம் பொய் பிரச்சாரம் செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் கடும் சேதத்தை ஏற்படுத்தியதை பாகிஸ்தானும் அமெரிக்காவும் அப்பட்டமாகவே ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காகச் சுமார் சுமார் ₹5,700 கோடி ரூபாய் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதம் அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டுறவு நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. F-16 போர் விமானங்களுக்கு மிகவும் தேவையான ஆயுத-ஒருங்கிணைப்பு அமைப்புகளை மறுசீரமைக்கவும் மறுசான்றளிக்க தேவையான வன்பொருள் ஆகியவற்றையும் பழுது பார்க்கவும், avionics modules, crypto gear, மற்றும் Operational Flight Program களை மேம்படுத்தவும், ஏவியோனிக்ஸ், பயிற்சித் திட்டங்கள் மற்றும் முழு தளவாட ஆதரவு ஆகியவையும் இந்தத் தொகுப்பில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் F -16 போர் விமானங்களின் ஆயுட்காலத்தை 2040 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டுறவு நிறுவனம், பாகிஸ்தானுக்கான இந்த ஒப்பந்தம் எந்தவகையிலும், பிராந்திய அமைதியை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆப்ரேஷன் சிந்துாரால் பாகிஸ்தான் பலத்த சேதத்தைச் சந்தித்திருப்பது அம்பலமாகியிருப்பதுடன், சேதமடைந்த ரேடார்கள், கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு மையங்கள், போர் விமானங்கள் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைக்கக வேண்டிய தேவையிருக்கிறது என்பது அமெரிக்கா வழங்கியுள்ள நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் உதவிகள் மூலம் தெரியவந்துள்ளாக ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் F -16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய வரலாறு இந்திய விமானப்படைக்கு உண்டு. 2019ம் ஆண்டு, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதல் நடத்திய இந்தியா , ஜம்முகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: Pakistan suffered heavy losses in Operation Sindh: The truth exposed through US funds worth Rs. 5700 crore!pakistannewsTodayOperation Sindoor
ShareTweetSendShare
Previous Post

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘கோலிவுட்’ : நடைமுறை சிக்கல்களால் இருளில் மூழ்கும் எதிர்காலம்..!

Next Post

19 மாகாணங்கள் வழக்கு : H1B விசா கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies