சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!
Jan 14, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிகப்பட்டியான வார்டுகளை கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக 1,597 வார்டுகளில் வெற்றிப்பெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை 1,919 வார்டுகளில் பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது. இது கேரளாவில் பாஜக அடைந்து வரும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் 45 ஆண்டுகளாக இடது சாரிகளின் கோட்டையாக இருந்து வந்தது. அந்தக் கோட்டையைத் தகர்த்தெறிந்து, அங்குக் காவிக்கொடியை நாட்டியுள்ளது பாஜக. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன.

அதில் 50 வார்டுகளை பாஜக தொக்காகத் தூக்கியுள்ளது. கேரள அரசியல் வரலாற்றில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றுவது இதுவே முதல்முறை. அதேபோல், பாலக்காடு நகராட்சியிலும் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்குள்ள 53 வார்டுகளில் 25 வார்டுகளை தன்வசமாக்கியுள்ளது.

இந்த வெற்றிகளால் கேரள பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஆளும் சிபிஎம் கட்சியின் அலுவலகம் முன்பு பாஜகவினர் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேரள பாஜகவின் மூத்த தலைவரான a.d.v.gopalakrishnan தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடனமாடினார்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல, திருவனந்தபுரம், கொச்சின், பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக மாவட்ட தலைவர்கள், வெற்றிப்பெற்ற கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேட்டியளித்த ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியல், ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றிக்காக மக்கள் இந்த வெற்றியை அளித்துள்ளதாகக் கூறினார். மேலும், மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பும் மக்கள் பாஜகவிற்கு ஆதரவளிக்க தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் முதன்முறையாகப் பாஜக ஒரு எம்பியை பெற்றது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிக வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனால், நம்பிக்கையும், உற்சாகமும் அடைந்துள்ள கேரள பாஜகவினர், அடுத்து சட்டமன்ற தேர்தலில் சாதிக்க தயாராகி வருகின்றனர்.

Tags: PM ModiKeralaBJP breaks CPM stronghold: BJP members are excited by consecutive victorieskerala local body election
ShareTweetSendShare
Previous Post

புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்? : பாதுகாப்பற்ற சூழல் பயணிகள் அச்சம்!

Next Post

கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் : சந்தித்த ஜாம்பவான்கள் – அதிர்ந்த வான்கடே!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies