துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? - சிறப்பு கட்டுரை!
Jan 13, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஈரான் பல்வேறு நாடுகளாக உடையலாம், அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் ஆருடங்களும் புறக்கணிக்கத்தக்கவையாக இல்லை. என்ன நடக்கிறது ஈரானில்?. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

இலங்கை, வங்தேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் ஏற்பட்டதை போலவே, தற்போது ஈரானிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, வன்முறை சம்பவங்கள் என ஒட்டுமொத்த ஈரானும் அமைதியை தொலைத்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புதான் இதற்கு பிரதான காரணம். ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை வாங்க வேண்டும் என்றால், ஈரான் மக்கள் சுமார் 14 லட்சம் ரியால்களை வழங்க வேண்டும். அந்த அளவுக்கு அதன் மதிப்பு அதல பாதாளத்தில் உள்ளது.

இதனால், அரிசி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. வருடாந்திர பணவீக்க விகிதமும் அதிர்ச்சியூட்டும் வகையில் 40 சதவீதத்தை எட்டியது. நிலைமையை சமாளிக்க முடியாத ஈரான் அரசு, எரிபொருள் விலையை உயர்த்தியது.

மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை விலையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. இத்தகை காரணங்களால், எதையும் வாங்க முடியாததாலும், எங்கும் செல்ல முடியாததாலும் ஈரான் மக்கள் குமுற தொடங்கினர். அந்த குமுறல்தான் தற்போது கட்டுப்படுத்த முடியாத போராட்டமாக வெடித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். அரசு கட்டங்களை தாக்கியும், பொதுச்சொத்துக்களுக்கு தீவைத்தும் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து இடங்களிலும் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசின் அடக்குமுறையால், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதான அனைவரும் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக்கப்படும் எனவும், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தபோதும், பொதுமக்கள் பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து, போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது வழிப்பாட்டு தலமான மசூதிகளையும் அவர்கள் தீவைத்து கொளுத்தி வருகின்றனர். ஈரானின் மதகுருவும், உச்சபட்ச தலைவருமான கமேனியின் படத்தை பெண்கள் எரித்தும், அந்த நெருப்பில் சிகரெட் பற்றவைத்தும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் ஈரான் இளவரசர் ரெசா பஹ்லவி, மக்களின் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட்டு விட வேண்டாம் என்றும், முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றுபடியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல்வேறு நாடுகள் ஈரானுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மேலும், ஈரானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரான் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதியான முறையில் போராடும் மக்களைக் கொலை செய்வதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால், அமெரிக்கா தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மக்கள் சுதந்திரத்தை விரும்ப தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானில் உள்ள பல்வேறு இனமக்கள் தங்களுக்கு தனிநாடு பிரித்துகொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வடமேற்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குர்து இனமக்கள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இப்படி, உள்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டத்தாலும், உலக அரங்களில் எழுந்து வரும் கண்டனங்களாலும் ஈரான் அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது. குறிப்பாக, மதகுரு கமேனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஈரான் நிலைமை என்னவாகும்?. இதுதான் இன்றைய தேதிக்கு மில்லியன் டாலர் கேள்வி.

Tags: IndiaIsraelTrumpamerica warningIran potestiran economic crisis
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!

Next Post

கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமை புகுத்தி சாதனை – குடியரசு தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞர்களுக்கு அழைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies