துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? - சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஈரான் பல்வேறு நாடுகளாக உடையலாம், அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் ஆருடங்களும் புறக்கணிக்கத்தக்கவையாக இல்லை. என்ன நடக்கிறது ஈரானில்?. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

இலங்கை, வங்தேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் ஏற்பட்டதை போலவே, தற்போது ஈரானிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, வன்முறை சம்பவங்கள் என ஒட்டுமொத்த ஈரானும் அமைதியை தொலைத்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புதான் இதற்கு பிரதான காரணம். ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை வாங்க வேண்டும் என்றால், ஈரான் மக்கள் சுமார் 14 லட்சம் ரியால்களை வழங்க வேண்டும். அந்த அளவுக்கு அதன் மதிப்பு அதல பாதாளத்தில் உள்ளது.

இதனால், அரிசி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. வருடாந்திர பணவீக்க விகிதமும் அதிர்ச்சியூட்டும் வகையில் 40 சதவீதத்தை எட்டியது. நிலைமையை சமாளிக்க முடியாத ஈரான் அரசு, எரிபொருள் விலையை உயர்த்தியது.

மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை விலையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. இத்தகை காரணங்களால், எதையும் வாங்க முடியாததாலும், எங்கும் செல்ல முடியாததாலும் ஈரான் மக்கள் குமுற தொடங்கினர். அந்த குமுறல்தான் தற்போது கட்டுப்படுத்த முடியாத போராட்டமாக வெடித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். அரசு கட்டங்களை தாக்கியும், பொதுச்சொத்துக்களுக்கு தீவைத்தும் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து இடங்களிலும் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசின் அடக்குமுறையால், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதான அனைவரும் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக்கப்படும் எனவும், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தபோதும், பொதுமக்கள் பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து, போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது வழிப்பாட்டு தலமான மசூதிகளையும் அவர்கள் தீவைத்து கொளுத்தி வருகின்றனர். ஈரானின் மதகுருவும், உச்சபட்ச தலைவருமான கமேனியின் படத்தை பெண்கள் எரித்தும், அந்த நெருப்பில் சிகரெட் பற்றவைத்தும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் ஈரான் இளவரசர் ரெசா பஹ்லவி, மக்களின் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட்டு விட வேண்டாம் என்றும், முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றுபடியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல்வேறு நாடுகள் ஈரானுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மேலும், ஈரானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரான் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதியான முறையில் போராடும் மக்களைக் கொலை செய்வதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால், அமெரிக்கா தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மக்கள் சுதந்திரத்தை விரும்ப தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானில் உள்ள பல்வேறு இனமக்கள் தங்களுக்கு தனிநாடு பிரித்துகொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வடமேற்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குர்து இனமக்கள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இப்படி, உள்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டத்தாலும், உலக அரங்களில் எழுந்து வரும் கண்டனங்களாலும் ஈரான் அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது. குறிப்பாக, மதகுரு கமேனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஈரான் நிலைமை என்னவாகும்?. இதுதான் இன்றைய தேதிக்கு மில்லியன் டாலர் கேள்வி.

Tags: Iran potestiran economic crisisIndiaIsraelTrumpamerica warning
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!

Next Post

கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமை புகுத்தி சாதனை – குடியரசு தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞர்களுக்கு அழைப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies