குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சந்தித்தார்
May 19, 2025, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சந்தித்தார்

இந்தியா எப்போதும் இலங்கைக்குத் துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை நேற்று (21.07.2023) இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே, சந்தித்தார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற குடியரசுத் தலைவர், “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற இந்தியாவின் கொள்கை, இந்த பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு, வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.

கடந்த ஓராண்டில் இலங்கையின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க இந்தியா வழங்கிய பன்முக ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். தேவையான நேரத்தில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இரு நாடுகளின் கூட்டுச் செயல்பாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவின் தலைமையின் கீழ் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவும் இலங்கையும் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

முன்னதாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே 20-07-2023 அன்று இந்தியா வந்தடைந்தார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, கப்பல் சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies