குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சந்தித்தார்
Aug 26, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே சந்தித்தார்

இந்தியா எப்போதும் இலங்கைக்குத் துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Murugesan M by Murugesan M
Jul 22, 2023, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை நேற்று (21.07.2023) இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே, சந்தித்தார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற குடியரசுத் தலைவர், “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற இந்தியாவின் கொள்கை, இந்த பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு, வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார்.

கடந்த ஓராண்டில் இலங்கையின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க இந்தியா வழங்கிய பன்முக ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். தேவையான நேரத்தில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இரு நாடுகளின் கூட்டுச் செயல்பாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவின் தலைமையின் கீழ் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவும் இலங்கையும் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

முன்னதாக இரண்டு நாள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே 20-07-2023 அன்று இந்தியா வந்தடைந்தார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, கப்பல் சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies