2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை- மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே
Aug 20, 2025, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை- மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே

Web Desk by Web Desk
Jul 25, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும்பருவநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021 ஐ 12 ஆகஸ்ட் 2021 அன்று அறிவித்தது. இது 2022 ஜூலை 1 முதல்  கீழ்க்காணும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை  செய்துள்ளது.

(i)பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், தெர்மாகோல்

(ii) தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், ஃபோர்க்குகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல், அழைப்பிதழ் அட்டைகள்  சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும்  100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி பேனர்கள்.

2022 டிசம்பர் 31 முதல் நூற்று இருபது மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை இந்த அறிவிப்பு தடைசெய்கிறது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மத்திய அரசின் வேதியியல் மற்றும் பெட்ரோ ரசாயன  துறையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2022ஜூலை 1முதல் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் ஈடுபட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு சுற்றுச்சூழல் மாற்றுகள் குறித்த தேசிய கண்காட்சி மற்றும் ஸ்டார்ட் அப் மாநாடு – 2022 ஆகியவை தமிழக அரசுடன் இணைந்து 2022 செப்டம்பர் 26-27 தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டன.
இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மாற்று பொருட்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தென்னை நார், சக்கை, அரிசி மற்றும் கோதுமை தவிடு, தாவர மற்றும் விவசாய எச்சங்கள், வாழை மற்றும் பாக்கு இலைகள், சணல் மற்றும் துணி ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழல் மாற்றுகள் தயாரிக்கப்பட்டன.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து – சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு

Next Post

எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது- பிரதமர் நரேந்திர மோடி

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies