திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து - சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு
Jun 11, 2026, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து – சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு

Murugesan M by Murugesan M
Jul 25, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்த போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது.

அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரகுபதி தலைமையிலான ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டதுடன், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது, ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நடத்தலாம் என்ற உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறைகாட்டவில்லை என்பதால், 2018ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

Tags: high court
ShareTweetSendShare
Previous Post

IRCTC செயலி திடீர் முடக்கம்- பயணிகள் அவதி

Next Post

2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை- மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே

Related News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies