எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது- பிரதமர் நரேந்திர மோடி
Apr 26, 2026, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது- பிரதமர் நரேந்திர மோடி

Murugesan M by Murugesan M
Jul 25, 2023, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடியது.

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்திய கம்பெனி, பயங்கரவாத அமைப்புகளான இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புகளிலும் இந்தியா பெயர் உள்ளது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையை கொண்டு வருவதால் எதுவும் நடந்துவிடாது.
தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற, திசையற்ற, ஓய்ந்து போன, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை திட்டத்தை மட்டும் கொண்டுள்ள கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. இதை போன்ற கூட்டணியை முன்னர் நான் பார்த்தது கிடையாது. இந்த கட்சிகள் விவாதத்தில் இருந்து நழுவுகின்றன.

‘கிழக்கு இந்தியா’ கம்பெனி போல் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகின்றன. இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன. நாட்டின் பெயரை வைப்பதால் மட்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது.

“எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும், இந்தத் தீர்மானத்துடன் நாம் முன்னேறி, இந்தக் கனவோடு வாழ வேண்டும் என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 25 ஆண்டு காலம் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, கூட்டணியை முன்னோக்கி கொண்டு செல்ல அழைப்பு விடுத்தார் என்று ஜோஷி கூறினார்.2014 ஆம் ஆண்டில், உலகளவில் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தோம், இரண்டாவது ஆண்டில், 5 வது இடத்தை அடைந்தோம், மேலும் எங்கள் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஜோஷி மேலும் கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை- மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே

Next Post

7 மாவட்டங்களுக்குக் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Load More

அண்மைச் செய்திகள்

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies