சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 29, 2023, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச புலிகள் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புலிகள் போன்ற கம்பீரமான உயிரினங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும். வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதை தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி சர்வதேச புலிகள் தினம் குறித்து பேசினார் . அப்போது அவர், உலகின் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் மட்டுமுள்ளதாகவும் மற்றும் இது போன்று சிங்கங்கள், டால்பின்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் மைசூரில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் 5 வது புள்ளிவிவரங்களை, வெளியிட்டார். அதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018-ஆம் ஆண்டில் 2,967 இல் இருந்து 6.74 சதவீதம் அதிகரித்து 2022-ஆம் ஆண்டு 3,167 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அம்ருத்  காலின் போது புலிகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையையும் பிரதமர் வெளியிட்டார், மேலும் சர்வதேச பெரிய பூனைகள் அமைப்பை (ஐபிசிஏ) தொடங்கினார். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட உலகின் ஏழு பெரிய பூனைகளின் பாதுகாப்பில் ஐபிசிஏ கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்தியா புலியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கொடுத்துள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் இப்போது இந்தியாவில் இருப்பதும், நாட்டில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகங்கள் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவரின் முயற்சியால் இது சாத்தியமானது” என்று பிரதமர் மோடி கூறினார்.

இன்று, இந்தியா முழுவதும் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. முன்னர் குறிப்பிட்டபடி, 2006 இல் 1,411 ஆகவும், 2010 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,167 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மால் எஞ்சிருக்கும் புலிகளைப்  பாதுகாக்க முடியும்.

 

 

Tags: nationaltigerconservationday2023tigerday29july2023
ShareTweetSendShare
Previous Post

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Next Post

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி- தங்கம் வென்ற தமிழகப் பெண்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies