சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Jun 1, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Web Desk by Web Desk
Jul 29, 2023, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச புலிகள் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புலிகள் போன்ற கம்பீரமான உயிரினங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும். வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதை தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி சர்வதேச புலிகள் தினம் குறித்து பேசினார் . அப்போது அவர், உலகின் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் மட்டுமுள்ளதாகவும் மற்றும் இது போன்று சிங்கங்கள், டால்பின்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் மைசூரில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் 5 வது புள்ளிவிவரங்களை, வெளியிட்டார். அதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018-ஆம் ஆண்டில் 2,967 இல் இருந்து 6.74 சதவீதம் அதிகரித்து 2022-ஆம் ஆண்டு 3,167 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அம்ருத்  காலின் போது புலிகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையையும் பிரதமர் வெளியிட்டார், மேலும் சர்வதேச பெரிய பூனைகள் அமைப்பை (ஐபிசிஏ) தொடங்கினார். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட உலகின் ஏழு பெரிய பூனைகளின் பாதுகாப்பில் ஐபிசிஏ கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்தியா புலியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கொடுத்துள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் இப்போது இந்தியாவில் இருப்பதும், நாட்டில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகங்கள் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவரின் முயற்சியால் இது சாத்தியமானது” என்று பிரதமர் மோடி கூறினார்.

இன்று, இந்தியா முழுவதும் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. முன்னர் குறிப்பிட்டபடி, 2006 இல் 1,411 ஆகவும், 2010 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,167 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மால் எஞ்சிருக்கும் புலிகளைப்  பாதுகாக்க முடியும்.

 

 

Tags: nationaltigerconservationday2023tigerday29july2023
ShareTweetSendShare
Previous Post

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Next Post

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி- தங்கம் வென்ற தமிழகப் பெண்

Related News

டெல்லியில் தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் தரைமட்டம்!

வெற்றிக்காக மட்டுமல்ல, விடாமுயற்சி மற்றும் தீவிர அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்  தமிழ்மகள்  வித்யா ராம்ராஜ் – நயினார் நாகேந்திரன்

திருச்சியில் திருடர்கள் குறித்து தகவல் அளித்த வீட்டு உரிமையாளர் – கோட்டை விட்ட போலீஸ்!

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி!

கன்னியாகுமரி அருகே ஸ்கிப்பிங் கயிற்றால் மகனை தாக்கிய மதபோதகர் கைது!

சிவகங்கை கல்குவாரியில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!

ஒன்றிய அரசு என்பதே தவறு, மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? – சிபி.ராதாகிருஷ்ணன் கேள்வி!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா – எராளமானோர் பங்கேற்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – மேட்டுப்பாளையத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணி தொடக்கம்!

வத்தலகுண்டு அருகே சாலை அமைக்க கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 24 பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த இந்தியா!

பள்ளிகள் திறந்த முதல் 5 நாட்களுக்கு மாணவர்களின் புத்தக பைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies