இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் ஜூலை 28ந் தேதி முடிந்த நிலையில் தலைமை நீதிபதி கங்க புர்வாலா மற்றும் நீதிபதி ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று ( ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தன.
அனைத்து தரப்பிலும் எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டன.
இந்த சூழலில், இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும்போது, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.