கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!
Oct 28, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Web Desk by Web Desk
Aug 5, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனால், கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளதால் உத்தரகண்ட் மாநிலம் கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது தீராத ஆவல்.

குறிப்பாக, 12 ஜோதிர்லிங்க தலங்களில்  ஒன்றாக அமைந்த கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட கோடை காலங்களில்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியது. பக்தர்களும் ஆர்வமுடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கௌரிகண்ட் என்கிற பகுதியில் மலைப்பாதையில் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதி பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மலைப்பாதை மிகவும் சேதமடைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரையைத்  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கடை வைத்திருந்த 19 பேரைப்  காணவில்லை. காணாமல் போனவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப்படை குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போனவர்கள் அனைவருமே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: kedarnathSivalingamJyotirlinga
ShareTweetSendShare
Previous Post

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

Next Post

குறள் உணர்த்தும் இலக்கியங்கள்…

Related News

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies