கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!
Jul 25, 2025, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Web Desk by Web Desk
Aug 5, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனால், கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளதால் உத்தரகண்ட் மாநிலம் கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது தீராத ஆவல்.

குறிப்பாக, 12 ஜோதிர்லிங்க தலங்களில்  ஒன்றாக அமைந்த கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட கோடை காலங்களில்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியது. பக்தர்களும் ஆர்வமுடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கௌரிகண்ட் என்கிற பகுதியில் மலைப்பாதையில் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதி பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மலைப்பாதை மிகவும் சேதமடைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரையைத்  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கடை வைத்திருந்த 19 பேரைப்  காணவில்லை. காணாமல் போனவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப்படை குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போனவர்கள் அனைவருமே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: kedarnathSivalingamJyotirlinga
ShareTweetSendShare
Previous Post

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

Next Post

குறள் உணர்த்தும் இலக்கியங்கள்…

Related News

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies