இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை - அமித்ஷா
Feb 17, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

10 மொழிகளில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - அமித்ஷா

Murugesan M by Murugesan M
Aug 5, 2023, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுடெல்லியில் இன்று மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம்  நடைபெற்றது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கையின் 12 ஆவது தொகுதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமித்ஷா இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை. அனைத்து இந்தியா மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்றார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஐந்து உறுதிமொழிகளை நாட்டின் முன்வைத்துள்ளார். பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிப்பது, இவற்றை 100% செயல்படுத்துவதற்கு அனைத்து இந்திய மொழிகளும் மற்றும் ஆட்சி மொழியும் வலிமை படுத்த வேண்டும்.

மொழிக்கு மதிப்பு கொடுக்காமல் பாரம்பரியத்தை மீட்க முடியாது. உள்ளூர் மொழிகளுக்கும் மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை, அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும். ஆட்சி மொழியின் வேகம் மந்தமாக இருந்தாலும், எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல், அதனை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை 10 மொழிகளில் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி எடுத்துள்ளார், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த கல்வியை பெற முடியும். அந்த தருணம் உள்ளூர் மொழிகள் மற்றும் அலுவல் மொழிகளின் எழுச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலகளாவிய மேடையில் பெருமையுடன் முன்வைப்பதால், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு வேறு எந்த சாதகமான தருணமும் இருக்க முடியாது என்று கூறினார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒரு உரை கூட ஆங்கிலத்தில் ஆற்றியதில்லை, அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர், இது பல்வேறு மொழிகளை இணைக்கும் இயக்கத்திற்கு உத்வேகத்தை அளிக்கிறது.

அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது. அடிமைக் காலத்திற்குப் பிறகும் இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் அப்படியே இருப்பது பெரிய சாதனை. நமது நாட்டை ஒன்றிணைக்க மொழிகள் வேலை செய்துள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் ஒன்பது தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2019 முதல் மூன்று தொகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன. 12வது தொகுதியின் கருப்பொருள் ‘எளிமைப்படுத்துதல்’.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினார்களுக்கும் நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்காலத்திலும் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் இந்த குழு தொடர்ந்து பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா, திரு நிஷித் பிரமானிக் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: Amith shaHindilanguageMedical
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது.

Next Post

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Related News

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா இறங்கி வந்த ஈரான்!

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies