கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!
Apr 29, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேதர்நாத்தில் நிலச்சரிவு: 19 பேர் மாயம்… 3 உடல்கள் மீட்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 5, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்களில் 3 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனால், கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளதால் உத்தரகண்ட் மாநிலம் கடவுளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இத்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்பது தீராத ஆவல்.

குறிப்பாக, 12 ஜோதிர்லிங்க தலங்களில்  ஒன்றாக அமைந்த கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட கோடை காலங்களில்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் கேதார்நாத் யாத்திரை தொடங்கியது. பக்தர்களும் ஆர்வமுடன் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கௌரிகண்ட் என்கிற பகுதியில் மலைப்பாதையில் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 19 பேர் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதி பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மலைப்பாதை மிகவும் சேதமடைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக, கேதார்நாத் யாத்திரையைத்  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கடை வைத்திருந்த 19 பேரைப்  காணவில்லை. காணாமல் போனவர்களை மாநிலப் பேரிடர் மீட்புப்படை குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போனவர்கள் அனைவருமே அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரகண்ட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: kedarnathSivalingamJyotirlinga
ShareTweetSendShare
Previous Post

இந்தி மொழி உள்ளூர் மொழிகளுடன் போட்டி இல்லை – அமித்ஷா

Next Post

குறள் உணர்த்தும் இலக்கியங்கள்…

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies