சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வின்போது மயங்கி விழுந்த காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதல்வர் விஜய் வருகைக்கு சற்று நேரத்திற்கு முன்பாக, கோட்டை கொத்தளத்தில் பணியில் இருந்த ஆவடியைச் சேர்ந்த வாத்திய இசைக்குழு காவலர் தர்மராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
















