தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் தான் மிகுந்த அக்கறை கொண்டவன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தனது பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் தான் மிகுந்த அக்கறை கொண்டவன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
















