சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம் ஊடகம் மற்றும் Madras Frames சார்பில், சுதந்திர தின் கதைகளைப் பறைசாற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமை, பண்பாடு மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையை புகைப்படக் கலையின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டது. சென்னை நகரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், ‘Operation Sindoor’ தொடர்பான புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள், ஒரு காட்சியை மட்டும் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், அதனுடன் தொடர்புடைய மனித உணர்வுகள், சமூக வாழ்க்கை மற்றும் வரலாற்றுத் தருணங்களைப் பதிவு செய்யும் காட்சி ஆவணங்களாக அமைந்துள்ளன.
நிகழ்ச்சியின் புகைப்படத் துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜகோபால் மற்றும் மதுமிதா கே. ஆகியோர் போட்டியின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புகைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதுடன், இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை காட்சிகளின் வழியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ‘Madras Frames’ புகைப்படக் கண்காட்சி அமைந்துள்ளது.
















