நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, ஆரோவில்லில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
ஆரோவில்லின் ஆன்மீக வழிகாட்டியான ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்த நாளும், சுதந்திர தின விழாவும் இணைந்து கொண்டாடப்பட்டன. குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
















