உக்ரைன் போர் அமைதி பேச்சுவார்த்தை: அஜித் தோவல் பங்கேற்பு!
Aug 29, 2026, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் போர் அமைதி பேச்சுவார்த்தை: அஜித் தோவல் பங்கேற்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 5, 2023, 08:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் இந்தியா சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷ்யா போரைத் தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், ரஷ்யா வெளியேறாமல் போரை தொடர்ந்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பலரும் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். எனவே, போரை நிறுத்த உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரதப் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், போருக்கான தருணம் இதுவல்ல என்று புடினிடம் எடுத்துக் கூறினார். அதேபோல, கடந்தாண்டு நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டபோதும், போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த போர் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதற்கான முயற்சியில் உலக நாடுகள் இறங்கி இருக்கின்றன. அதன்படி, கடந்த ஜூன் மாதம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 10 அம்ச அமைதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

போர் நிறுத்தம், ரஷ்யத்  துருப்புக்களை திரும்பப் பெறுதல், உக்ரைன் எல்லைகளை மீட்டெடுத்தல், உணவுப் பாதுகாப்பு, தானிய ஏற்றுமதியை உறுதி செய்தல், அனைத்து கைதிகளையும் விடுவித்தல் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இந்த 10 அம்ச திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை மாநாடு இன்றும், நாளையும் சவூதி அரேபியா உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொள்வார் என்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிவித்திருந்தார். அதன்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் சென்றார். இன்று நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

Tags: russiaajit dovalUkraineRussia Ukraine war
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது – அண்ணாமலை

Next Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை…

Related News

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கான் உணவகத்தில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies