“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!
Jan 14, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

இந்திய” என்ற பெயரில் தொடங்கும் சட்டங்களைப்  “பாரதிய” என்று மாற்றும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கடந்த மாதம் “இந்தியா” என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியா என்கிற பெயரைத்  தவிர்த்து “பாரதம்” என்று பா.ஜ.க.வினர் அழைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில், “இந்திய” எனத் தொடங்கும் சட்டங்களையும் “பாரதிய” என்று மாற்ற மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இம்மசோதா இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றை பெயர் மாற்றம் செய்ய வழிவகைச் செய்கிறது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹீத, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயர் பாரதிய நாகரிக் சுரக் ஷ சன்ஹீத, இந்திய ஆதாரச் சட்டத்தின் பெயர் பாரதிய சக் ஷயா என மாற்றம் செய்யப்பட இம்மசோதா பரிந்துரைக்கிறது.

அதே சமயம், இம்மசோதா மேற்கண்ட சட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றம் செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. இச்சட்டங்களின் அடிப்படைக் கூறுகள் மற்றும் அடிப்படை அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட உள்ளன. ஒரு நபரை கைதுச் செய்வது முதல் அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களைக் கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது என பல விஷயங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதும் மாற்றி அமைக்கப்படவிருக்கிறது.

மேற்கண்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1860 முதல் 2023-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின் படியே குற்றவியல் நீதி அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆகவே, ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மேற்கண்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்ப பட்டு உள்ளது.

நாடாளுமன்றக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்று 3 சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் வரும். காரணம், புதிய தண்டனைச் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. அதேபோல, பாரதிய நியாய சங்ஹீத சட்டத்தின் மூலம் தேச துரோக வழக்கை இரத்து செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ParliamentAmitshahamit shah parliamentAmitshah SpeechNew BILLBharatiya Sanhita Suraksha BillBharatiya Nyaya Sanhita Bill
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Next Post

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies