நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!
Oct 14, 2025, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 12, 2023, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டு, வன்முறை வெடித்திருப்பதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத்துறை  அறிவுறுத்தி இருக்கிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் தற்போது இராணுவ புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6 நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. தற்போது 7-வது நாடாக நைஜர் நாட்டிலும் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில், அதிபர் முகமது பாஸும் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களும், இராணுவமும் அதிபர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நைஜர் நாட்டில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மேலும், அந்நாட்டு அதிபர் முகமது பாஸுமையும் இராணுவம் கைது செய்திருக்கிறது. இதனால், அதிபரின் ஆதரவாளர்கள் இராணுவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அதேசமயம், பொதுமக்களில் மற்றொரு தரப்பினர் இராணுவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, அந்நாட்டில் இராணுவத் தரப்பினருக்கும், அதிபர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறி இருக்கிறது. ஆகவே, வன்முறை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டின் நிலவரம் தற்போது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகவே, அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறும்போது மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அதேபோல, அந்நாட்டின் நிலவரம் தற்போது கலவரமாக இருப்பதால், அந்நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள், திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சீராகி, இயல்பு நிலை திரும்பியவுடன் பயணத்தை மேற்கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது, அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை- அண்ணாமலை

Next Post

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies