நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!
Jan 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டு, வன்முறை வெடித்திருப்பதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத்துறை  அறிவுறுத்தி இருக்கிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் தற்போது இராணுவ புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6 நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. தற்போது 7-வது நாடாக நைஜர் நாட்டிலும் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில், அதிபர் முகமது பாஸும் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களும், இராணுவமும் அதிபர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நைஜர் நாட்டில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மேலும், அந்நாட்டு அதிபர் முகமது பாஸுமையும் இராணுவம் கைது செய்திருக்கிறது. இதனால், அதிபரின் ஆதரவாளர்கள் இராணுவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அதேசமயம், பொதுமக்களில் மற்றொரு தரப்பினர் இராணுவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, அந்நாட்டில் இராணுவத் தரப்பினருக்கும், அதிபர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறி இருக்கிறது. ஆகவே, வன்முறை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டின் நிலவரம் தற்போது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகவே, அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறும்போது மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அதேபோல, அந்நாட்டின் நிலவரம் தற்போது கலவரமாக இருப்பதால், அந்நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள், திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சீராகி, இயல்பு நிலை திரும்பியவுடன் பயணத்தை மேற்கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது, அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை- அண்ணாமலை

Next Post

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies