பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!
Jun 25, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் எவ்வித சவால்களையும் சமாளிக்கும் வகையில், ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கின்றன. கார்கில் உட்பட சில இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீனாவுக்கும், இந்தியா பதிலடி கொடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில், மேம்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களை இந்தியா நிலைநிறுத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், சுரங்கப் பாதைகளையும் இந்தியா அமைத்து வருகிறது. குறிப்பாக, கார்கில் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் மிக்-21 ரக போர்விமானங்களையும், கல்வான் சம்பவத்திற்குப் பிறகு, லடாக் எல்லையில் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தியது.

இந்த நிலையில், திடீரென ஸ்ரீநகரிலும் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பால்கோட் தாக்குதலின்போது பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, தாக்கி அழித்த மிக்-21 ரக போர் விமானத்தை விட, அதிக திறன் கொண்டது மிக்-29 ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமானப் படைப் பிரிவுத் தலைவர் விபுல் சர்மா கூறுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதியாக ஸ்ரீநகர் விளங்குகிறது. மேலும், தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிக எடை, உந்துதல் திறன், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற மூலோபாய ரீதியாக மிக்-29 ரக போர் விமானம் மிகவும் சிறந்தது. ஆகவே, மிக்-29 ரக போர் விமானம் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Next Post

ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று

Related News

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies