பாகிஸ்தான் தீவிரவாதிகளை பழிதீர்த்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை மே 7ம் தேதி இந்தியா மேற்கொண்டது.
இதில், பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை துல்லியமாக தாக்கி அழித்தது. 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதனையொட்டி இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது எனவும் இந்தியா எதையும் மறக்காது; யாரையும் மன்னிக்காது எனவும் தெரிவித்துள்ளது.
















