கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என தமிழக பொறுபபு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசிய வாயிலாக பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். தவெக 35 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் வேண்டும் என நிபந்தனை விதித்ததாக கூறினார்.
குறிப்பாக, கூட்டணி வைத்து தவெக தலைவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் பெரும்பான்மையை அமைக்கலாம் எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த அரசு பொறுப்பேற்கும் வரை நிர்வாகத்தை கவனிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
















