அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கான அரசு பங்களாக்கள் உள்ளன.
அமைச்சர்களுக்கு மட்டும் 60 பங்களாக்கள் உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்த பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, முத்துசாமி, பெரியகருப்பன், சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், கயல்விழி உள்ளிட்ட 23 அமைச்சர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்க உள்ளதால், பங்களாக்களை காலி செய்யும்படி முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
















